Veerapandiya Kattabomman Birthday ..(3-Jan-1760)
=====================================
யாரை கேட்கிறாய் வரி என்று
தாரை முழங்கிய வீரனுக்கு
படையல் இந்த வரிகள்
...ஆடலரசன்@Natarajan
இன்று சுதந்திரம் சுத்தமாய் மறந்த
போன தலைமுறைக்கு சிவாஜி
... அன்று நடிப்பில் வீரமுட்டினார்
அன்று கட்டபொம்மா நீ ஆங்கிலேயனை கேட்டாயா தெரியாது
"நீ என்ன மாமனா மச்சானா ..." என்று
இன்று உன்னையே தெரியாத இந்த தலைமுறைக்கு
அன்று ஆங்கிலேயனை நீ அழைத்தாயா தெரியவில்லை
வயலுக்கு நாற்றுநடவும், மங்கையர்க்கு மஞ்சளரைக்கவும்
இன்று விவசாயமே மறந்த, மஞ்சள்பூசவே மறந்த பல இந்தியர்க்கு
என்றும் மூச்சு காற்றும், குடிக்க நீரும் அபரிமிதமாய் கிடைப்பதால்
இவன் போல் பலரால் போராடி பெற்ற சுதந்திரத்திலும்
இன்றும் நச்சு கலக்கிறோம் சுதந்திரமாய்...
ஊமைத்துரை, துரைச்சிங்கம்(சகோதரர்கள்),
துரைக்கண்ணு (சகோதரி), ஈஸ்வரவடிவு(சகோதரி) தவிர
கட்டபொம்மன்கூட பிறந்த துரைகள் மூவர்
பாஞ்சாலங் குறிச்சியை விட்டு ஓடஓட விரட்டிய ஆலன் துரை,
கப்பம்கட்ட மறுத்ததால் விளக்கம் கேட்ட ஜாக்சன்துரை,
கட்டபொம்மனிடம் பயந்த துரைகள் இருவர்
கயத்தாறில் "தூக்கு கயிறே மேல்" என்று கர்ஜித்து
மனதாற்றில் தாக்கம் தந்து, வீரமாய் தூக்கில்ஏறிய
கட்டபொம்மன், ஆங்கிலதுரைகளே பயந்த ஒருவர்
அவன் பிறந்தநாளிலாவது நம் சந்ததியினர்க்கு
கட்டபொம்மன் சிறந்த வாழ்வை பகிர்ந்து
அவன் புகழ் வளர்ப்போம்...
இவன்
=====================================
யாரை கேட்கிறாய் வரி என்று
தாரை முழங்கிய வீரனுக்கு
படையல் இந்த வரிகள்
...ஆடலரசன்@Natarajan
இன்று சுதந்திரம் சுத்தமாய் மறந்த
போன தலைமுறைக்கு சிவாஜி
... அன்று நடிப்பில் வீரமுட்டினார்
அன்று கட்டபொம்மா நீ ஆங்கிலேயனை கேட்டாயா தெரியாது
"நீ என்ன மாமனா மச்சானா ..." என்று
இன்று உன்னையே தெரியாத இந்த தலைமுறைக்கு
அன்று ஆங்கிலேயனை நீ அழைத்தாயா தெரியவில்லை
வயலுக்கு நாற்றுநடவும், மங்கையர்க்கு மஞ்சளரைக்கவும்
இன்று விவசாயமே மறந்த, மஞ்சள்பூசவே மறந்த பல இந்தியர்க்கு
என்றும் மூச்சு காற்றும், குடிக்க நீரும் அபரிமிதமாய் கிடைப்பதால்
இவன் போல் பலரால் போராடி பெற்ற சுதந்திரத்திலும்
இன்றும் நச்சு கலக்கிறோம் சுதந்திரமாய்...
ஊமைத்துரை, துரைச்சிங்கம்(சகோதரர்கள்),
துரைக்கண்ணு (சகோதரி), ஈஸ்வரவடிவு(சகோதரி) தவிர
கட்டபொம்மன்கூட பிறந்த துரைகள் மூவர்
பாஞ்சாலங் குறிச்சியை விட்டு ஓடஓட விரட்டிய ஆலன் துரை,
கப்பம்கட்ட மறுத்ததால் விளக்கம் கேட்ட ஜாக்சன்துரை,
கட்டபொம்மனிடம் பயந்த துரைகள் இருவர்
கயத்தாறில் "தூக்கு கயிறே மேல்" என்று கர்ஜித்து
மனதாற்றில் தாக்கம் தந்து, வீரமாய் தூக்கில்ஏறிய
கட்டபொம்மன், ஆங்கிலதுரைகளே பயந்த ஒருவர்
அவன் பிறந்தநாளிலாவது நம் சந்ததியினர்க்கு
கட்டபொம்மன் சிறந்த வாழ்வை பகிர்ந்து
அவன் புகழ் வளர்ப்போம்...
இவன்
No comments:
Post a Comment